சென்னை

இன்று காலை நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்  பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாகத் தமிழகம் வந்துள்ளார் அவர் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேற்று தொடங்கி வைத்தார் , இதைத் தொடர்ந்து அவர் இன்று அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் பங்கேற்க உள்ளார்.  இன்று காலை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடக்கிறது.

இந்நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.  பிரதமருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி,  முதல்வர் மு.க. ஸ்டாலின்,உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.  இந்த விழா இன்று காலை 10 மணி முதல் 11.30 மணி வரை சென்னை கிண்டி வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெற உள்ளது.

விழாவில் பிரதமர் மோடி பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்குப் பதக்கங்களை வழங்கி கௌரவிக்கவுள்ளார். பல்கலை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பிரதமர் வருகையால் 7 அடுக்கு காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.