சென்னை,

டந்த 12ந்தேதி பிளஸ்2 தேர்வு முடிவு வெளியானது. இந்த தேர்வில்  வெற்றி  பெறாதவர்களுக்கான துணைத் தேர்வுகள் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கும், விண்ணப்பித்து விட்டு தேர்வில் கலந்துகொள்ளாதவர்களுக்கும் ஜுன் மாதம் சிறப்பு துணைத்தேர்வு நடத்தப்பட இருக்கிறது.

 

இந்த தேர்வில் ஜுன் 23-ம் தேதி தொடங்கி ஜூலை 6-ம் தேதி முடிவடையும். 

தனித்தேர்வர்கள் தேர்வு கட்டணமாக ஒரு பாடத்துக்கு ரூ.50, இதர கட்டணம் ரூ.35., ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.50 ஆகியவற்றை சேர்த்து பணமாக செலுத்த வேண்டும்.