சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்,  பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. இதையொட்டி கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தேர்வுக்காக  3,300 தேர்வு மையங்கள் தயாராக உள்ள நிலையில், சுமார்  7.22 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வுகளை எழுதுகின்றனர்.


தமிழ்நாட்டில் இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு  இன்று (மார்ச் 1)  தொடங்கி தொடங்கி மார்ச் 22ந்தேதி முடிவடைகிறது. ஏற்கனவே செய்முறை தேர்வுகள் முடிவடைந்த நிலையில், எழுத்துத்தேர்வுகள் இன்று பலத்த கட்டுப்பாடுகளுடன் தொடங்குகிறது. இந்த தேர்வுக்காக 3,300 க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் எற்படுத்தப்பட்டு உள்ளது.

சுமார்   7 ஆயிரத்து 534 பள்ளிகளை சேர்ந்த சுமார் 7 லட்சத்து 22 ஆயிரம் 200 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இவர்களில்,  3,58 ,201 மாணவர்கள், 4 ,13, 99 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலித்தவர் ஒருவர்  அடங்குவர். இதனை தவிர தனித்தேர்வர்கள் 21 ஆயிரத்து 875 பேரும், சிறைவாசிகள் 125 பேரும் இன்று தொடங்கும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்க உள்ளனர்.

பிளஸ்2 தேர்வையொட்டி பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.  தேர்வு மையங்களில் மாணவர்கள் தேர்வெழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. வினாத்தாள் மற்றும் விடைத்தாள் பாதுகாப்பாக கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், தேர்வு அறைகளில் மாணவர்கள் காப்பி அடித்தல், விடைத்தாள் மாற்றுவது போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்களை பிடிக்க 3,200 பறக்கும் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிவறை வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டு உள்ளன. அதேபோல் தேர்வறைக்குள் மாணவர்கள் செல்போன், மின்சாதானங்கள் உள்ளிட்டவை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிளஸ்2 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட், , பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது.  ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலம் பள்ளிகள் மூலம் பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை தரப்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் www.dge.in.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்காக, “online portal” என்ற வாசகத்தினை ‘click’ செய்து “HIGHER SECONDARAY FIRST YEAR/ SECOND YEAR EXAM MARCH – 2024” என காணப்படும் பக்கத்தில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள user id, password பயன்படுத்தி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1 ஆம் தேதி தமிழ் மொழி பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. மார்ச் 5 ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடைபெறுகிறது. தொடர்ந்து மார்ச் 8 ஆம் தேதி பல்வேறு வகையான பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. மார்ச் 11 ஆம் தேதி, வேதியல், கணக்கு உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வுகள் நடைபெறுகிறது. மார்ச் 15 ஆம் தேதி, கணினி, இயற்பியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்விகள் நடைபெறுகிறது.

கணிதம், விலங்கியல், வர்த்தகம், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உள்ளிட்ட பாடத்தின் பொதுத் தேர்வுகள் மார்ச் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளன. தொடர்ந்து உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 22ஆம் தேதி நடைபெற உள்ளன.

இதனிடையே, வரும் பதினோராம் வகுப்பினருக்கு வருகிற 4ம் தேதி தொடங்கி 25-ந்தேதி வரையிலும், அதனைத் தொடர்ந்து 10 வகுப்பினருக்கு வருகிற 26ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 8ம் தேதி வரையிலும் பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது.