சென்னை:

சென்னையில் இன்று குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்துக்கு காவல்துறை தடை விதித்துள்ள நிலையில், ஜனநாயகக் குரல்களை தடுக்காதீர்கள் என்று சென்னை காவல் ஆணையருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர்  கமல்ஹாசன் டிவிட் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மாலை குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பேரணி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டருந்த நிலையில், அதற்கு காவல்துறை ஏற்கனவே அனுமதி வழங்கிய நிலையில், தற்போது அனுமதியை ரத்து செய்து அறிவித்து உள்ளது.

இது எதிர்க்கட்சிகளில் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், சென்னை காவல்ஆணையராக இருக்கும் இந்தியரான கமிஷனர் அவர்களே, உங்களுக்கு ஒரு வேண்டுகோள், வள்ளுவர் கோட்டத்தில் இன்று மாலை நடைபெற இருந்த ஜனநாயகக் குரல்களைக் தடுக்க வேண்டாம்’  என பதிவிட்டு உள்ளார்.