சிசிலி: இத்தாலி நாட்டில் நடைபெற்ற பாலர்மோ ஓபன் டென்னிஸ் தொடரின் ஒன்றையர் பிரிவில், பிரான்ஸ் நாட்டின் பியோனா பெர்ரே சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

கொரோனா முடக்க காலத்தில், கால்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை அடுத்து, டென்னிஸ் போட்டிகளும் துவங்கியுள்ளன.

இத்தாலி நாட்டில் மகளிருக்கான ‘பாலர்மோ’ ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றது. இதில், எஸ்தோனியாவின் கொன்டாவெய்ட்டை இறுதிப்போட்டியில், 6-2-7-5 என்ற செட் கணக்கில் தோற்கடித்த பிரான்சின் பியோனா பெர்ரோ சாம்பியன் பட்டத்தை தட்டிச‍ென்றார்.

முதல் இரண்டு செட்டுகளில் தொடர்ச்சியாக வென்று, ஆட்டத்த‍ை விரைவிலேயே முடித்துவிட்டார்.