புதுடெல்லி: இந்தாண்டு ஐபிஎல் தொடரை, அமீரக நாட்டில் நடத்துவதற்கு மத்திய அரசின் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல்.

மேலும், வீவோ விலகியுள்ள நிலையில், ஐபிஎல் தொடருக்கான புதிய டைட்டில் ஸ்பான்சர் யார் என்பது ஆகஸ்ட் 18ம் தேதி இறுதி செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். விருப்பமுள்ள நிறுவனங்கள் இதற்காக விண்ணப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்றதோடு, அதுவொரு 7 நாள் செயல்பாடு எனவும் அவர் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் ஆகிய இரண்டிலிருந்தும் எழுத்துப்பூர்வ அனுமதி வந்துள்ளதா? என்று கேட்கப்பட்டதற்கு, “ஆம், அனைத்துவித எழுத்துப்பூர்வ அனுமதிகளும் கிடைத்துள்ளன” என்றார் அவர்.

ஒரு உள்நாட்டு கிரிக்கெட் தொடர், வெளிநாட்டிற்கு மாற்றப்படும்போது, அந்நிகழ்வுக்கு உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகங்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டியது அவசியம்.