சென்னை: அமீரக நாட்டில் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்காக, சென்னை உள்ளிட்ட அணிகள், தங்களுடன் வலைப் பந்துவீச்சாளர்களை அழைத்துச் செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, அமீரக நாட்டிற்கு பயணப்படவுள்ள 8 ஐபிஎல் அணிகளுடன், இந்த வலைப் பந்துவீச்சாளர்களும் பயணப்படவுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் உள்ளிட்ட அணிகள், வலைப் பந்துவீச்சாளர்களுக்கான ரோஸ்டரை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளன.

இதன்மூலம், வெளியில் அறியப்படாத புதிய திறமைவாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 19 வயதுக்கு கீழுள்ள மற்றும் 23 வயதுக்கு கீழுள்ள மாநில அளவிலான முதல் நிலை கிரிக்கெட் வீரர்கள், வலைப் பந்துவீச்சாளர்களாக தேர்வு செய்யப்படுவர் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வலைப்பந்து வீச்சாளர்கள்தான், ஐபிஎல் அணிகளின் பேட்ஸ்மென்களுக்கான பந்துவீச உள்ளனர்.