சென்னை

னது அமெரிக்கப் பயணத்துக்குப் பிறகு நடிகர் விஜய் தன் பெற்றோர்களை நேற்று சந்தித்துள்ளார்.

நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. அடுத்து வெங்கட் பிரபு இயக்கவுள்ள தனது 68-வது பட வேளைகளில் விஜய் இறங்கியுள்ளார். இதில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியானது.

ஒன்று இளம் வயது கதாபாத்திரம் என்பதால், விஜய்யை இளமையாகக் காட்ட முடிவு செய்துள்ள வெங்கட் பிரபு, இதற்கான பணிகளுக்காக விஜயுடன் கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். ஒரு சில நாட்களில் அதன் பணிகளை முடித்துவிட்ட வெங்கட் பிரபு கடந்த வாரமே சென்னை திரும்பினாலும், நடிகர் விஜய் அங்குத் தங்கி ஓய்வு எடுத்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன் தன் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு  சென்னை வந்த நடிகர் விஜய், நேற்று தனது பெற்றோரை நேரில் சந்தித்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.

எனவே அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள தனது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரையும், அம்மாவையும் நேரில் சந்தித்து நலம் விசாரித்த விஜய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.  தற்போது அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.