சென்னை:
மிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெட்ரோல் விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது, இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் ஏழை, நடுத்தர வர்க்கத்தின் வலியை உணர்ந்து பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரி லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இதை தொடர்ந்து நேற்றிரவு பெட்ரோல் விலை குறைப்பு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று எப்ற்றோல் விலை 100 ரூபாய்க்கும் கீழ் குறைந்தது. அதாவது. இன்றைய பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 99.47 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டர் ஒன்றுக்கு 954.39 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட பெட்ரோல் விலை குறைக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.