50 ரூபாய் கொடுத்து  சிறுமியின் ’’அழகை’’  ரசித்த காமுகன்கள்..

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய் பட்டனத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரின் குடும்பம் ஊரடங்கு காரணமாகப் பசி-பட்டினியால் வாடியுள்ளது.

மனநிலை பாதித்த மனைவி மற்றும் 8 வயது மகளுடன் அவர் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

அந்த பகுதியைச் சேர்ந்த ஒருவனிடம்,  அந்த 8 வயது சிறுமி ‘’பசிக்கிறது..காசு கொடுங்கண்ணா’’ என்று கெஞ்சி இருக்கிறாள்

அந்த காமுகன் ‘ உன் அந்தரங்க அழகைக் காட்டினால் காசு தருகிறேன்’’ என்று ஆசை காட்ட,  வறுமையின் பிடியில் இருந்த அந்த சிறுமியும் தன் ‘அழகை’’ அந்த காமுகனிடம் காட்ட, அவன் 50 ரூபாய் ’’பிச்சை’’யாக போட்டுள்ளான்.

இதனை கேள்விப்பட்ட மேலும்  5 காமுகன்களும் அந்த சிறுமியை அழைத்து, ‘அழகு’’ காட்டச் சொல்லி காசு கொடுத்துள்ளனர்.

பணத்தை அந்த சிறுமி  தனது தந்தையிடம் கொடுத்தபோது, ‘’யார் பணம் கொடுத்தார்கள்?’’ என்று கேட்டுள்ளார்.

நடந்த கதையை ஒப்புவித்தாள், சிறுமி.

உடலும், உள்ளமும் பதறிய அந்த தொழிலாளி இந்த குரூர செயல் குறித்து, குளச்சல் போலீசில் புகார் அளித்துள்ளார்.

போலீசார் விசாரணை நடத்தி சிறுமியிடம் கேவலமாக நடந்து கொண்ட 6 காமுகன்களையும் கைது செய்துள்ளனர்.

இவர்களில், குழந்தையின் தாத்தா வயதுள்ள 75 வயது கிழவனும் அடக்கம்.