சென்னை: 
திருவள்ளூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கந்த சஷ்டி அவமதிப்புக்கு பிறகு, தலைவர்களின் சிலைகள்  அவமதிக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு கோவையில் பெரியார் சிலை, புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை, குழித்தலையில் அண்ணா சிலை என பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றன.
இந்த நிலையில்,  திருவள்ளூரில் மீண்டும் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டு உள்ளது. மீஞ்சூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.