புதுடெல்லி:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை வர உள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு பல கட்ட விசாரணைகளைத் தொடர்ந்து இறுதிக்கட்ட விசாரணைக்கு வந்ததுள்ளது. இன்றைய விசாரணையின்போது, காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் மத்திய அரசு சரமாரியாக கேள்விக்கணைகளை வீசினர்.

இதுகுறித்து பேசிய நீதிபதிகள், அரசமைப்புச் சட்டம், கூட்டாட்சி தத்துவம் ஆகியவற்றுடன் தொடர்புடைய அதிமுக்கிய விஷயமாக இந்த வழக்கை கருகிறோம் என்று கூறிய நீதிபதிகள், ஆளுநர் அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட வேண்டியதுதானே என்றும் நீதிபதிகள் மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், அமைச்சரவை முடிவு எடுத்த விவகாரத்தில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய அவசியமே இல்லை என்றும், இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் குறித்து முடிவெடுக்க போகிறோம் என்று கூறிய நீதிபதிகள் அரசியல்சாசனம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்படி, பேரறிவாளன் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்று கூறிய நீதிபதிகள், விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரரணையை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், பேரறிவாளனின் மேல்முறையீட்டு மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது