டெல்லி:

னக்கு விதிக்கப்பட்டுள்ள  ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பேரறிவாளன் தரப்பில் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து தமிழகஅரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது.

1991 ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் அப்போதைய பிரதமர், ராஜீவ்காந்தி விடுதலைப்புலி அமைப்பைச் சேர்ந்த பெண் மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார்.இது தொடர்பான வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ராஜீவின் மனைவியும், காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி, வேண்டுகோளை ஏற்று, அவர்களின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில், தனது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக, தன் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படாததால் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,பெல்ட் குண்டு தொடர்பாக புதிய தகவலை பெற முடியவில்லை என்று  தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

7 பேரை விடுவிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் முடிவு என்று  பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திதுடன்,  7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, பேரறிவாளனை விடுவிக்கும் விவகாரத்தில் எடுக்கப்பட்டுள்ள சட்ட முடிவுகள் குறித்து 2 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இது தொடர்பாகஏற்கனவே நடைபெற்ற  விசாரணையில் , ராஜீவ்காந்தி கொலைக்கு பயன்படுத்தப்பட்ட பெல்ட் குண்டு தொடர்பாக புதிய அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.