சென்னை:
பிளாஸ்டிக்கை பார்த்து மக்கள் கோபப்பட வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் விழிப்புணர்வு பேரணி இன்று தொடங்கியது. அப்போது பொதுமக்களுக்கு மஞ்சப்பையினை அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் மெய்யநாதன் ஆகியோர் வழங்கினர்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் , பிளாஸ்டிக்கை பார்த்தாலே மக்களுக்கு கோபம் வர வேண்டும். பசுமை பரப்பின் விகிதத்தை அதிகரிக்க முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. தினசரி வாழ்க்கையில் நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் பைகளை பயன்படுத்துவதை பழகிக்கொள்ள வேண்டும் . அனைத்து மாவட்டங்களிலும் பிளாஸ்டிக் அபாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், சென்னை ,செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ,திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரே குடியிருப்புகளில் தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கல்வி நிலையங்களில் முழுவதுமாக கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார்.