பவானி சாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்துக்கொண்டே வருவதால், ஈரோடு மாவட்டத்தின் நீராதாரத்திற்கு பெரும் சிக்கல் ஏற்படும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணையில், காலை 11 மணி நிலவரப்படி, நீர்மட்டம் 53.30 அடியாக உள்ளது. பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 215 கன அடி நீர்வரத்து வந்துக்கொண்டிருக்கும் அதேநேரம், 200 கன அடி நீர் குடிநீர் தேவைக்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் மொத்த நீர் இருப்பு 5.2 டி.எம்.சியாக உள்ளது.

இந்நிலையில் தொடர்ந்து அணையின் நீர்மட்டம் சரிந்து வருவதால் மாவட்டத்தின் நீராதாரத்திற்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்று அச்சப்படும் மக்கள், நீரை சேமிக்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.