சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், இந்த தேரிதலில் திமுக வெற்றி பெறவில்லை; மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று விமர்சித்து உள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்த கேள்விக்கு, உள்ளாட்சித் தேர்தலில் மக்களின் தீர்ப்பை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம் என்றவர், உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெறவில்லை. மக்கள்தான் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று விமர்சித்தார்.

தொடர்ந்து பேசியவர்,  அரசியல் ஆதாயத்துக்காக குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை அரசியல் கட்சிகள் எதிர்க்கிறார்கள், இந்த சட்டங்களால் இந்தியாவில் உள்ள எந்த மதத்தின்ருக்கு பாதிப்பு இல்லை என்றும் கூறினார்.