சென்னை:
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், முககவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த சென்னை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கடந்த சில நாட்களுக்கு முன்பு முககவசம் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று ஒரே நாளில் 1,472 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் முககவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.