இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என நடிகை பாயல் கோஷ் புகார் அளித்துள்ளார் .இது தொடர்பாக தனக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு கோரி மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியைப் பாயல் சந்தித்துப் பேசினார்.
இந்த குற்றச்சாட்டில் ரிச்சா சட்டா உள்ளிட்ட அனுராக் காஷ்யப் படங்களில் நடித்த நடிகைகளின் பெயரையும் பயன்படுத்தியிருந்தார் பாயல்.
இதனால் ரிச்சா பாயல் கோஷுக்கு எதிராக கடந்த திங்கள் (05.10.20) மும்பை உயர்நீதி மன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார். இதற்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடாக பாயல் வழங்க வேண்டும் என்றும் ரிச்சா தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் ரிச்சா தொடர்ந்த அவதூறு வழக்கு பொய்யானது என்று பாயல் கோஷ் கூறியுள்ளார். என்னிடம் அனுராக் கூறியதைத்தான் நான் ஊடகங்களிடம் கூறினேன். நானாக யார் பெயரையும் கூறவில்லை” என பாயல் கூறியுள்ளார் .
இந்நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டிய நடிகர் பயல் கோஷ், மன்னிப்பு கோரவும், நடிகருக்கு எதிராக அவதூறு வழக்குத் தாக்கல் செய்த நடிகர் ரிச்சா சதாவுக்கு எதிராக தனது கருத்துக்களை வாபஸ் பெறவும் தயாராக இருப்பதாக மும்பை உயர் நீதிமன்றத்தில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.