தெலுங்கு திரையுலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணின் ‘அஞ்ஞாதவாசி’ திரைப்படம் பொங்கலுக்கு வெளி வருகிறது.   இந்தப் படத்துக்கு முன் பதிவு மும்முரமாக நடந்து வருகிறது.   சிரஞ்சீவியைப் போலவே பவன் கல்யாணுக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.   அதனால் முதியோர் முதல் இளைஞர்கள் வரை இந்த படத்தின் டிக்கட்டுகளை பதிவு செய்துள்ளனர்.

உபாசனா

ஆந்திரப் பிரதேச அப்போலோ மருத்துவமனை நிர்வாகியான உபாசன கோனிடேலா சிரஞ்சீவியின் மருமகள் ஆவார்.    இவர் தனது மருத்துவமனை ஊழியர்களுக்காக மட்டுமே சுமார் 500 டிக்கட்டுகளை நகரில் உள்ள பல திரையரங்குகளில் பதிவு செய்துள்ளார்.  முதல் நாள் முதல் காட்சிக்கான இந்த டிக்கட்டுகளை  தனது ஊழியர்களுக்கு பொங்கல் பரிசாக உபாசனா அளித்துள்ளார்.

இது அப்போலோ மருத்துவமனை ஊழியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.    உபாசனாவை பொறுத்த வரை ஒரே நேரத்தில் ஊழியர்களையும் மகிழ்வில் ஆழ்த்தி உள்ளார்,  அத்துடன் புகுந்த வீட்டில் சின்ன மாமனார் பவன் கல்யாணையும் மகிழ்வில் ஆழ்த்தி உள்ளார்.