க்கள் கவிஞர் என அழைக்கப்பட்டவர் மறைந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இவரது மனைவி கவுரவம்மாள் (80), உடல் நலக்குறைவால் காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு அவரது சொந்த ஊரான செங்கப்படுத்தான்காடு கிராமத்தில் உள்ள  வீட்டிலேயே  சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின்  மகன் குமாரவேலு, செய்தி மக்கள் தொடர்புத் துறையில் கூடுதல் இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர், எழுத்தாளர்கள், உறவினர்கள் என ஏராளமானோர்  அஞ்சலி செலுத்திய நிலையில் நேற்று மாலையே உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு  மகன் குமாரவேலு தீ மூட்டினார்.

கவுரவம்மாள் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் இரா.முத்தரசன், தினகரன் எம்எல்ஏ ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.