சென்னை

வந்தே பாரத் ரயிலுக்காக வைகை, பொதிகை பாண்டியன்  எக்ஸ்பிரஸ் ரயில்கள் பயண நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சென்னை- நெல்லை இடையே மதுரை மார்க்கமாகச் செல்லும் வந்தே பாரத் ரயிலால் பல ரயில்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.  ஆங்காங்கே இந்த ரயில்கள் நிறுத்தப்பட வேண்டிய சூழல்  உருவாகி உள்ளது.

எனவே தென்னக ரயில்வே வைகை, பொதிகை, பாண்டியன் விரைவுவண்டி ரயில்களின் பயண நேரத்தை இன்று முதல் மாற்றி உள்ளது.  இந்த நேரமாற்றம் காரணமாகப் பயண நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வந்தே பரத் ரயிலுக்காக மற்ற ரயில்களின் பயண நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் மிகவும் அதிருப்தி அடைத்துள்ளனர்.

ஆனால் தென்னக ரயில்வே நேரம் வந்தே பாரத் ரயிலால் மற்ற ரயில்கள் இடையில் நிறுத்தப்படுவதைத் தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி உள்ளனர்