ரோடு

பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பயணிகள் பயந்து போய் கீழிறங்கி ஓடினார்கள்

அரசு பேருந்து ஒன்று ஈரோடு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.   ஈரோட்டில் இருந்து சேலம் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த அந்த பேருந்தில் சிலர் ஏறி அமர்ந்திருந்தனர்.    ஓட்டுனர் அங்கமுத்து மற்றும் பரமேஸ்வரன் ஆகிய இருவரும் அருகில் உள்ள கடையில் தேநீர் பருகிக் கொண்டிருந்தனர்.

திடீரென அந்த பேருந்தின் எஞ்சின் பகுதியில் இருந்து புகை வந்தது.    சில நிமிடங்களில் பேருந்து தீப்பிடித்து எரியத் தொடங்கியது.  பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் இதனால் பீதி அடைந்தனர்.   அவர்கள் பெரும் கூச்சலுடன் பேருந்தை விட்டு கீழே இறங்கி ஓடி உள்ளார்கள்.

உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.   அவர்கள் விரைவாக வந்து தியை அணைத்துள்ளனர்.     இந்த விபத்தில் யாரும் பாதிப்படையவில்லை என தெரிய வந்துள்ளது.   திடீரென பேருந்து தானாக தீப்பிடித்து எரிந்ததற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.