சென்னை: சென்னை அருகே பண்ணை வீட்டில் பலான பார்ட்டி நடத்திய நடிகை கவிதாஸ்ரீ உள்பட 15பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னையை அடுத்த கானத்தூர் கடற்கரை பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் கொரோனா விதிகளை மீறி ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நடைபெறுவதாக காவல்துறைக்கு புகார் வந்தது. தையடுத்த, அங்கு சென்ற காவல்துறையினர், அங்கு பார்ட்டி நடைபெறுவதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அதிரடியாக அங்கே நுழைந்த காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.

விசாரணையில், அங்கு பார்ட்டியை ஏற்பாடு செய்தது துணை நடிகை கவிதாஸ்ரீ என்பது தெரிய வந்தது. அங்கு பார்ட்டி என்ற பெயரில், மது, மாதுக்களுடன் பலான பார்ட்டிகள் நடைபெற்று வந்தது தெரிய வந்துள்ளது.

தனியார் சொகுசு விடுதியை சினிமா சூட்டிங் என்ற பெயரில் மாத வாடகைக்கு எடுத்து, இதுபோன்ற பார்ட்டிகளை நடத்தி வந்துள்ளார்  துணை நடிகை கவிதாஸ்ரீ. இந்த பாட்டியில் கலந்துகொள்ள 1,599 ரூபாயை நுழைவுக் கட்டணம். ஆனால், இளம்பெண்களுக்கு நுழைவு கட்டணம் கிடையாதாம். ஆட்டம் பாட்டத்துடன், மதுவிருந்துடன் நடைபெறும் இந்த பார்ட்டில்,  இளம் மாதுங்கள் ஆடலுடன் பார்ட்டியில் கலந்துகொண்டுள்ளவர்களை வலம் வந்து மயக்க வைப்பதும், விரும்பிய பெண்களை ஏலம் எடுப்பதும், பின்னர் அவரோடு பலான விருந்துக்கு அனுப்பி வைக்கப்படுவார்களாம்.

இந்த பார்ட்டி தொடர்பாக துணை நடிகை கவிதா ஸ்ரீ மற்றும் 11 பெண்கள் மற்றும் 40 வயதிற்கு மேற்பட்ட 15 ஆண்கள் மீது காவல்துறையினர் புகார் பதிந்துள்ளனர். மேலும்,  பண்ணை வீட்டிற்கு சீல் வைத்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.