தனது பல நாள் கனவு கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப் பச்சன், ’ஜெயம்’ ரவி, அவரது மகன் ஆரவ் ரவி, ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, கீர்த்தி சுரேஷ் , ஜெயராம் , அஸ்வின் ஆகியோரை படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது

படத்தின் கலை இயக்குநராக தோட்டாதரணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் . இது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உருவாக உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் பட்ஜெட் ரூ.800 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து 12 பாடல்கள் எழுதுகிறார்.

இந்நிலையில்,இப்படத்திலிருந்து பார்த்திபன் விலகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது .

‘ஒத்த செருப்பு’ படத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான முதற்கட்டப் பணிகளில் பார்த்திபன் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

தொடர்ச்சியாக 6 மாதங்கள் வரை படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. அவ்வளவு தேதிகள் ஒதுக்கவும் பார்த்திபனால் முடியாததும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.