சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர் காணல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக சார்பில் வழங்கப்பட்டு வந்த விருப்பமனு விதியோகம் நிறைவு பெற்றது. அதிமுக சார்பில் கடந்த 21ம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்த விருப்பமனு விநியோகம் மார்ச் 6ந்தேதியுடன் நிறைவு பெற்றது.

இதையடுத்து,  விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேர்காணல் நடத்தும் தேதிகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். அதன்படி, வரும் 10, 11 தேதிகளில் நேர்காணல் நடக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.  10ம் தேதி 20 தொகுதிகளுக்கும் 11ம் தேதி 20 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.