இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் நாடு முழுவதும் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக இன்று கடைபிடிக்கப்படுகிறது.

டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடமான ‘வீர் பூமி’-யில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே-வும் கலந்து கொண்டார்.

ராஜீவ் காந்தி நினைவு நாளில் ராகுல் காந்தி, “அவர் மறைந்த 32வது ஆண்டு நினைவு நாளில், எனது அன்புக்குரிய தந்தை ராஜீவ் காந்திக்கு நான் இதயப்பூர்வமான அஞ்சலி செலுத்துகிறேன். அப்பா, நீங்கள் எப்போதும் எனது உத்வேகமாக என் நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கிறீர்கள்” என்று தனது ட்விட்டரில் உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.