சென்னை:
அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலையே தொடர வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம். துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனுக்களை பட்டியலிடும்படி கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் வாதிடப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு வழக்கில், இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.