ஸ்ரீநகர்:

காஷ்மீர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்ததாகவும் இந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள உரி ராணுவ முகாம் அருகே  சாருண்டா என்ற பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அதிகாலையில்  அத்துமீறி  வந்து கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

ஆனால், அப்போது உஷாராக இருந்த இந்திய ராணுவத்தினர் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இதன் காரணமாக பாக். ராணுவத்தினர் அங்கிருந்து தப்பி ஓடினர். மேலும், பந்திபூரா மாவட்டத்தில் பாக். ராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும், அங்குள்ள இந்திய படையினர் அவர்களை விரட்டியடித்தாகவும் இந்திய ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலில் யாருக்கும் எந்தவித சேதம் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார்.