நாடு முழுவதும் வரலாறு காணாத அளவில் நூல் விலை உயர்ந்துள்ளது. இதனால், தமிழகத்தின் ஜவுளி சந்தைகளான ஈரோடு, திருப்பூர் மாவட்டம் உள்பட பல சில மாவட்டங்களில், நூல் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஜவுளி வியாபாரிகள் 2 நாள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக முதல்வரும், பிரதமர் மோடிக்கு நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி 2 முறை கடிதம் எழுதி உள்ளார். இந்த நிலையில், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மோடி அரசை விமர்சித்து கார்டூன் வெளியிடப்பட்டு உள்ளது.