ங்கா ரெட்டி, தெலுங்கானா

தைரிய்ம் இருந்தால் சீனா மீது சர்ஜிகல் ஸ்டிரைக் நடத்துங்கள் என பாஜகவுக்கு அசாதுதீன் ஓவைசி சவால் விடுத்துள்ளார்.

ஐதராபாத் பெருநகர மாநகராட்சிக்கான தேர்தல் சமயத்தில் தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பண்டி சஞ்சை, “ஐதராபாத் உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தலில் பாரத் ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) மற்றும் ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி ஆகியோர் ரோகிங்யா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வாக்காளர்களின் உதவியுடன் வெற்றி பெற முயல்கிறார்கள்.

எனவே ஐதராபாத் பெருநகர மாநகராட்சி தேர்தல் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ரோகிங்யா வாக்களர்கள் இல்லாமல் நடத்தப்பட வேண்டும். நாம் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அந்தப் பழைய நகரின் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துவோம்” என்று தெரிவித்திருந்தார்.

நேற்று சங்காரெட்டியில் நடந்த கூட்டம் ஒன்றில்  பேசிய ஒவைசி, “பாஜகவினர் பழைய நகரத்தின் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள். பாஜகவினரான உங்களுக்குத் தைரியம் இருந்தால் சீனாவின் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்துங்கள்” என சவால் விடுத்துள்ளார்.