சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கே ஆதரவு தெரிவிக்க ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல்  ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான  கூட்டணியை ஆதரிக்க ஆசிரியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அதை அரசு செவிமடுக்காமல் போராட்டத்தை ஒடுக்கியது. இதனால், அதிமுக அரசு மீது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கொலைவெறியில் உள்ளனர்.

இந்த நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக,  தேர்தலில் 85 சதவீத ஆசிரியர் சங்கங்கள் திமுக கூட்டணியை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம். சில தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை பொறுத்து முடிவுகள் மாற்றப்படும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.