சென்னை:  உலகில் அதிகம் பொய் பேசும் நபர் பிரதமர் மோடி என தமிழில் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்  அஜோய்குமார் கூறினார்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலுக்கான  தேர்தல் அறிக்கை வெளியிட்ட நிலையில், அந்த தேர்தல் அறிக்கையின் தமிழாக்கம் இன்று வெளியிடப்பட்டது.  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட  பொறுப்பாளர் அஜோய்குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

‘நியாய பத்ரா’ (நீதிக்கான ஆவணம்) என்ற பெயரில் நாடாளுமன்ற 18வது மக்களவைக்கான தேர்தல் அறிக்கையை அகில இந்திய காங்கிரஸ் கட்சி டெல்லியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் ஏப்ரல் 4, 2024 அன்று வெளியிட்டது. அப்போது, காங்கிரஸ் கட்சியின் முழக்கம்., வொர்க், வெல்த், வெல்ஃபேர்’ (work, wealth, welfare) என்பதுதான் என்று கூறப்பட்டது. இதில் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவி உள்பட ஏராளமான அறிபிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், தேர்தல் அறிக்கையின் தமிழாக்கம் இன்று சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில்  வெளியிடப்பட்டது.   சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங். பொறுப்பாளர் அஜோய்குமார் மற்றும் மாநில தலைவர் செல்வபெருந்தகை இணைந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

பின்னர்  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த  தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்  மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார்,: நம் பிரதமர் உலகில் அதிகம் பொய் பேசும் நபராக உள்ளார்  விமர்சித்ததுடன், சமூகநீதி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவை காங்கிரசின் முக்கிய குறிக்கோளாக உள்ளன. பெரும் முதலாளிகளுக்கு ரூ.18 லட்சம் கோடி வரி சலுகையை பாஜக அரசு வழங்கியுள்ளது. படித்த இளைஞர்கள் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றுகின்றனர் என குறிப்பிட்டார்.