மதுரை:

துபானத்தின் விலையை கட்டுக்குள் வைக்க தமிழகஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அரசு மதுபானக்கடைகளுக்கு எதிராக பல இடங்களில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வரும் சூழலில், மதுபானக் கடைகள் வேண்டும் என்று குடிகாரர்களும் போர்க்கொடித் தூக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், மதுபானத்தின் விலையை கட்டுக்குள் வைக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வித்தியாசமான வழக்கு ஒன்று  தேனியை சேர்ந்த உதயகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுமீது, நீதிபதிகள்  துரைசுவாமி, கிருஷ்ணவள்ளி அமர்வு விசாரணை நடத்தியது. வாதங்களைத் தொடர்ந்து, இந்த மனு தொடர்பாக  தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேனி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.