சென்னை

நாடாளுமன்ற தேர்தலில் தாம் பாஜக ஆதரவுடன் ராமநாதபுரத்தில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளதாக ஓ பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரத்தில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். நேற்று சென்னை பசுமை வழிச்சாலை இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர்,

”இரட்டை இலை சின்னத்தைப் பெறுவதற்கான சட்ட போராட்டம் தொடர்கிறது. தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க ஒரு தொகுதியில்  மட்டும் பாஜக ஆதரவுடன்  நின்று போட்டியிடுகிறேன். களத்தில் நின்று வென்று காட்ட முடிவெடுத்துள்ளேன். 

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு முழு ஆதரவு அளிக்கிறோம். பாஜக எங்களுக்கு நிறையத் தொகுதிகள் கொடுக்க முன்வந்தும் இரட்டை இலை சின்னம் இல்லாததால் ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம்.” 

என்று கூறியுள்ளார்.