ஓ.பி.எஸ். – மோடி

ன்று பிரதமர் மோடி  தமிழகம் வந்துள்ள நிலையில் அவரிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நேரில் வலியுறுத்தப்படும் என்று துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா சிலை திறப்பு விழா குறித்து துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோருடன் நேற்றிரவு ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பின் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழகத்திற்கு இன்று வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியிடம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நேரில் வலியுறுத்தப்படும் என்று தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

ஓ.எஸ் மணியன்

அதேபோல காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக அனைத்து கட்சிகளும் பிரதமரை சந்திக்க வேண்டும் என்று நேரம் கேட்டுளோம் என்று  அமைச்சர் ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.