சென்னை: 

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் திறக்கப்பட்டன. பள்ளிக்கு மாணவ மாணவிகள் உற்சாகமாக வருகை தந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ந்தேதியுடன் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளின் இறுதித்தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது. நேற்றுடன் கோடை விடுமுறை முடிந்த நிலையில், அரசு ஏற்கனவே அறிவித்தபடி இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

கடந்த 40 நாட்கள் ஓய்வுக்கு பின்னர்  இன்று பள்ளிகளுக்கு மாணவ மாணவிகள் உற்சாகமாக வருகை தந்தனர். தங்களுக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு வணக்கம் கூறி, தங்களது புதிய  வகுப்பறைக்குள் வந்து அமர்ந்தனர்.

பள்ளி திறந்த முதல்நாளான இன்றே,  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள், சீருடைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.