காட்பாடி: காட்பாடி தொகுதியில் கத்தாரிக்குப்பத்தில் 992 வாக்குகளில் 18 வாக்குகள் மட்டுமே பதிவாகின.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. காலை முதலே பொதுமக்கள், அரசியல் பிரபலங்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.

சில இடங்களில் மின்னணு வாக்கப்பதிவு இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்க 15 நிமிடங்கள் முதல் 1 மணிநேரம் வரை தாமதம் ஏற்பட்டது. மக்கள் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில், காட்பாடி தொகுதிக்குட்பட்ட கத்தாரிக்குப்பம் கிராமத்தில் 992 வாக்குகளில் 18 வாக்குகள் மட்டுமே பதிவாகின. கிராமத்தில் உள்ள சுற்றுச் சூழலை பாதிக்கும் ஆலையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து பெரும்பாலான வாக்காளர்கள் வாக்களிக்க முன் வரவில்லை.