சென்னை:
12.6% பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்டதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 16 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும், இதுவரை நடைபெற்ற முகாம்களில் 12 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.