திருவனந்தபுரம்: 40 ஆயிரம் சிம்கார்டுகள் , 180 செல்போன்கள்  மூலம் ஆன்லைன் மோசடி செய்த பலே நபரான கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரோஷனை கேரள  மாநில காவல்துறை கைது செய்துள்ளது. இவர்தான்,  ஆன்லைன் மோசடியில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அவரிடம் இருந்து சிம் கார்டுகள், மொபைல் போன்கள் உள்பட பல்வேறு தொழில்நுட்ப கருவிகள்  பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

 ஆன்லைன் பங்கு வர்த்தக தளத்தில் ரூ.1.08 கோடியை இழந்த வெங்கராவைச் சேர்ந்தவரின் புகாரின் பேரில் மார்ச் 10ஆம் தேதி விசாரணை தொடங்கிய கேரள மாநில சைபர் கிரைம் காவல்துறையினர்,  நேற்று முன்தினம் (புதன்கிழமை – ஏப்ரல் 8ந்தேதி) இரவு மடிகேரியில் அப்துல் ரோஷன் (46)  என்பரை அவரது து வீட்டில் இருந்து கைது செய்தது.  DCRB (மாவட்ட குற்றப் பதிவுப் பணியகம்) DySP VS ஷாஜூ தலைமையிலான சிறப்புக் குழுவினர் இந்த ஆன்லைன் மோசடி குற்றவாளியை தேடி வந்த நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆன்லைன் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன்மூலம் ஏராளமானோர் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர். நாடு முழுவதும் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதில் ஏராளமானோர் பணத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த மோசடிக்கு செல்போன்கள், சிம்கார்டுகள் தான் முக்கிய பங்காற்றி வருகின்றன.  இதுபோன்ற பிராடுகளை தவிர்க்க அனைத்து மாநில காவல்துறையினரும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தாலும், பலர் பேராசை காரணமாக ஆன்லைன் மோசடி கும்பலிடம் சிக்கி தங்களது பணத்தை பறிகொடுத்து வருகின்றனர். இதுபோன்ற  மோசடி பேர்வழிகளை சைபர் கிரைம் போலீசார், ரகசியமாக கண்காணித்து மோசடி ஆசாமியை கைது செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள மாநிலம் வெங்கரையைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைன் ஷேர்மார்க்கெட் தளத்தில் முதலீடு செய்துள்ளார். இதில் ரூ. 1 கோடியே 8 லட்சத்தை இழந்த அவர், இது குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் மலப்புரம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கர்நாடக மாநிலம் ஹரனபள்ளியில் வசிக்கும் ஒருவர் தான் ஆன்லைன் மோசடியில் முக்கிய குற்றவாளி என தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து,   அங்கு சென்ற கேரள சைபர் கிரைம் போலீசார் அவரது நடவடிக்கைகளை , ரகசியமாக கண்காணித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் அதிரடியாக கைது  செய்தனர். அவரிடம் இருந்து  மோசடிக்கு பயன்படுத்தி வந்த   40 ஆயிரம் சிம்கார்டுகள், 180 செல்போன்கள் மற்றும் 6 பயோ மெட்ரிக் ரீடர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

விசாரணையில் அவரது பெயர் அப்துல் ரோஷன் (வயது 46) என்பதும், டெல்லியைச் சேர்ந்த இவர், கர்நாடகாவின் மடிக்கேரியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்தது.

தனியார் மொபைல் நிறுவனத்தின் சிம் விநியோகஸ்தரான இவர், வாடிக்கையாளர் புதிய சிம் கேட்டு வரும்போது, அவர்களது கைரேகைகளை, 2 அல்லது 3 முறை பதிவு செய்து அவர்களுக்கு தெரியாமல் அதனை சேகரித்து விடு வாராம். பின்னர் அதனை வைத்து புதிய சிம்கார்டுகள் ஒவ்வொன்றும் ரூ.50-க்கு வாங்கி ஆன்லைன் மோசடி செய்பவர்களுக்கும் விற்றுள்ளார். இந்த சைபர் குற்றம் குறித்து கைதான ரோஷனிடம் போலீசார் தொட ர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மலப்புரம் மாவட்ட போலீஸ் அதிகாரி சசிதரன்.   இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள், பெரிய நெட்வொர்க் அமைத்து செயல்பட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளதாகவும்,   அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் செயல்படுவதாக  தெரிவித்துள்ளார். அவர்களையும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.