டெல்லி

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் அளித்துள்ளது

.

கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வ்ர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி உயர்நீதிமன்றத்தில் தா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

எனவே அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்தும், இடைக்கால ஜாமீன் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். மனு மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நிலுவையில் உள்ளது. இன்று தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிப்பது பற்றி தீர்ப்பு அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதன்படி டெல்லி முதல்வே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்த மாதம்(ஜூன்) 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஆரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடலாம் ஆனால் முதல்வராக அலுவல் பணிகளில் ஈடுபடக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.  உச்சநீதிமன்றம் ஜூன் 2ம் தேதி கெஜ்ரிவால் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கெஜ்ரிவாலுக்கு,

* இடைக்கால ஜாமீன் பெற்ற கெஜ்ரிவால் முதல்-மந்திரி அலுவலகம், தலைமைச் செயலகம் செல்லக்கூடாது.

* சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கு குறித்து கெஜ்ரிவால் கருத்து கூறக்கூடாது.

* இடைக்கால ஜாமீன் தொகையாக ரூ.50,000 செலுத்த வேண்டும்.

* அலுவலகம் சார்ந்த கோப்புகளில் கெஜ்ரிவால் கையெழுத்து போடக்கூடாது.

என்று உச்சநீதிமன்றம் நிபந்தனைகள் விதித்துள்ளது.