சென்னை

மிழக அரசு வரும் 31ம் தேதி வரை 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை எனவும் ஆன்லைன் வகுப்புக்கள் நடத்தலாம் எனவும் அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால்,1 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.  ஆயினும்,10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அரசு தெரிவித்தது.

கொரோனா அதிகரித்து வருவதால் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்து,ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்று கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இன்று தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா காரணமாக,10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுமுறை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

வரும் 31 ஆம் தேதி தொடங்க இருந்த,10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 ஆம் தேதி தொடங்க இருந்த திருப்புதல் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாகவும், தேர்வு குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தலாம்  என அறிவிக்கப்பட்டுள்ளது.