சென்னை:  திமுக சென்னை மாவட்டச் செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற  உறுப்பினராகவும் இருந்து வந்த  ஜெ. அன்பழகன் கடந்த ஆண்டு 2020 ஜூன் 10 அன்று  காலமானார். கொரோனாவின் கோரப்பிடியால் தமிழகம் சிக்கியிருந்த காலக்கட்டத்தில், மக்களுக்காக ஓடி ஓடி உதவி செய்த அன்பழகன், கொரோனாவின் பிடியில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவர் காலமாகி ஓராண்டு ஆகிறது.  அவரது கனவுகள் தற்போது நிறைவேறி உள்ளது. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவி ஏற்று, தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது.  ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்று ஒரு மாதம் கடந்துள்ளது. அவரது ஆட்சிப்பணி நாடே வியக்கும் வகையில் உள்ளது.

இந்த நிலையில், ஜெ.அன்பழகனின் மகன் ராஜா அன்பழகன், தந்தையின் ஓராண்டு நினைவுகள் மற்றும் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி குறித்து பத்திரிகை.காம் இணைய தளத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதன் விவரம் வருமாறு.

அவரது பேட்டி வீடியோ