சென்னை: பார்வை திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு  ஓராண்டு இலவச தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என  மாற்றுத்திறனாளி நல ஆணையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.  அதன்படி, பார்வை திறன் பாதிக்கப்பட்டவர்கள் விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று நினைவூட்டப்பட்டுள்ளது.

பார்வையற்றோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டுபவர் (ஆண்கள்/பெண்கள்) தொழிற் பயிற்சிப் பிரிவில், இலவச விடுதி வசதியுடன் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 2020-21ஆம் நிதியாண்டிற்கான ஓராண்டு பயிற்சியளிக்கப்பட உள்ளது

இதுதொடர்பாக மாற்றுத்திறனாளி நல ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தின் கீழ் இயங்கும், பூவிருந்தவல்லியிலுள்ள பார்வையற்றோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டுபவர் (ஆண்கள்/பெண்கள்) தொழிற் பயிற்சிப் பிரிவில், இலவச விடுதி வசதியுடன் பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு 2020-21ஆம் நிதியாண்டிற்கான ஓராண்டு பயிற்சியளிக்கப்பட உள்ளது.
பயிற்சியாளர்களுக்கு பயிற்சி உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ.300/- அளிக்கப்படும்.

இந்த ஆண்டுக்கான இப்பயிற்சியில் சேர்த்துக் கொள்வதற்கான கல்வித் தகுதி 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் வயது வரம்பு 31.08.2020 அன்று 14 வயதிலிருந்து 40 வயது வரையுள்ள, பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியாக இருத்தல் வேண்டும்.
விண்ணப்பங்கள் பார்வையற்றோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையம், பூவிருந்தவல்லி, சென்னை-56, அனைத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள். 23 .10.2020 மாலை 5.45க்குள் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
முதல்வர் -புலனாய்வாளர்,
பார்வையற்றோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையம், பூவிருந்தவல்லி, சென்னை -600 056.
இணைப்பு பயிற்சிக்கான விவரங்கள்
பயிற்சி மற்றும் காலம் : புத்தகம் கட்டுபவர் (ஓராண்டு பயிற்சி) (ஆண்கள்/பெண்கள்)
பயிற்சிக்கு தகுதியான நபர்: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மட்டும் (ஆண்கள்/பெண்கள்)
 வயது வரம்பு : 14 வயது முடிந்தவராகவும் 40 வயதுக்குள்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். (31.08.2020- ன் படி)
 கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவராக இருத்தல் வேண்டும்
 இதர விவரங்கள் : பயிற்சி காலத்தில் பயிற்சியாளர்களுக்கு தங்குமிடம், உணவு, பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்
பயிற்சி அளிக்கப்படும் இடம் பார்வையற்றோருக்கான அரசு தொழிற்பயிற்சி மையம், பூவிருந்தவல்லி, சென்னை – 600 056.
விண்ணப்பங்கள் வந்த சேர வேண்டிய கடைசி நாள்: 23.10.2020

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.