சென்னை: 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் கோடை விடுமுறை விடப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் கொளுத்தும் கோடை வெயிலில் பள்ளி மாணாக்கர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. தற்போது பிளஸ்2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி உள்ள நிலையில், 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையிலான தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. வரும் 9ந்தேதி முதல் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையில் தேர்வுகள் தொடங்கப்பட உள்ளன. 5 நாட்கள் நடைபெறும் இந்த தேர்வுகள் 13ந்தேதியுடன் முடிவடைகிறது.

இந்த நிலையில், மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை விடப்படுவதாகவும், விடுமுறைக்கு பின் ஜூன் 13-ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என   என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜுன் 23-ம் தேதி வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.