சென்னை:

ரடங்கு காரணமாக அவதிப்படும் வியாபாரிகளின் சந்தை கட்டணம் ரத்து மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு இருப்பதாக  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஏற்கனவே வியாபாரிகளின் சந்தை கட்டணம் ஏப்ரல் 30 வரை ரத்து செய்யப்பட்ட நிலையில், அதை அதை மேலும் ஒரு மாதம் நீட்டித்தும் தமிழக  முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

விவசாயிகளின் சிரமங்களை தவிர்க்க, விளைபொருட்களை பாதுகாப்பாக கிடங்குகளில் சேமித்து வைப்பதற்காக, சேமிப்பு கிடங்கு வாடகை கட்டணம் 30 நாட்களுக்கு செலுத்த தேவையில்லை என அறிவித்திருந்த நிலையில், தற்போது அதை நீட்டித்து, மேலும் ஒரு மாதத்திற்கு வாடகை செலுத்த தேவையில்லை உத்தரவிட்டுள்ளேன் என்று அதில் தெரிவித்து உள்ளார்.