டெல்லி: சிபிஎஸ்இ +2 தேர்வு ரத்து செய்யப்பட்டது ஏன்,  எதனடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும்? என மத்தியஅரசு பதில் அளிக்க  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலையின் தீவிர தாக்கம் காரணமாக, இந்த ஆண்டு நடைபெற இருந்த சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு ரத்து செய்யப்படுதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 1ந்தேதி பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி,  சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால்,  உயர்கல்விக்கு செல்வதற்கு 12-ம் வகுப்பு  தேர்வு மதிப்பெண்கள் மிகவும் முக்கியம் என்பதால், அவர்களின் மதிப்பெண்கள் எவ்வாறு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  அரசு பொதுத்தேர்வை ரத்து செய்ததில் மகிழ்ச்சியே. ஆனால் எதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்படும் என்ற கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால்,  சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு  மாணாக்கர்களுக்கு  எப்படி மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து 3 வாரத்திற்குள் முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,   குறைந்தது 2 வாரத்தில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியதுடன், தினமும் இது குறித்து ஆலோசனை நடத்தி முடிவ செய்யப்ப வேண்டும் என்றும்,  இந்த ஆலோசனை வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.