சென்னை:

மிழகத்தில் 38தொகுதி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 22 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெற்று முடிந்த நிலையில், வரும் 23ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  தமிழகம் முழுவதும் மொத்தம் 43 இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் 17வது மக்களவைக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 11-ந்தேதி தொடங்கி மே 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது.

தமிழகத்தில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்ட வேலூர் தொகுதி தவிர 38 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுகளில் நடை பெற்ற வாக்குக்ளும் வரும் 23ந்தேதி  எண்ணப்பட உள்ளது.

இந்த வாக்கு எண்ணிக்கை சென்னையில் 3 மையங்கள் உள்பட  தமிழகம் முழுவதும்  43 இடங்க ளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.  மத்திய சென்னையில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், வட சென்னையில் பதிவான ஓட்டுகள் ராணி மேரி கல்லூரியிலும், தென் சென்னை ஓட்டுகள் கிண்டி அண்ணா பல்கலைக் கழகத்திலும் எண்ணப்படுகின்றன.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் இரவு பகலாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளது. வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்கு எண்ணும் இடங்களில் ஒரு லட்சம் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும் சென்னையில் மட்டும் சுமார்  15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதாகவும், அனைத்து மையங்களிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வாக்கு எண்ணிக்கை அன்று காலை 7.30 மணிக்கு தொடங்குவதாகவும்,  முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அது முடிவடைந்ததும் மின்னணு எந்திரங்களில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி காலை 8.30 மணி அளவில் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ள ஆணையர்,  வாக்கு எண்ணும் மையங்களில் 14 மேஜைகள் வரை போடப்பட்டு இருக்கும். ஒரு கண்காணிப்பாளர், உதவியாளர், நுண் பார்வையாளர் ஆகியோரது மேற்பார்வையில் ஓட்டுகள் எண்ணப்படும் என்றும் கூறி உள்ளார்.

மேலும்,  ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையத்திலும் வேட்பாளர்களின் முகவர்கள் பணியில் இருப்பார்கள். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மின்னணு எந்திரங்களை அவர்களிடம் காட்டிய பின்னரே ஓட்டு எண்ணும் பணியை தொடங்குவார்கள். வாக்கு எண்ணிக்கை தொடங்கிய  அடுத்த 30 நிமிடங்களிலேயே முன்னணி நிலவரங்கள் தெரிய வரும்.

இந்த முறை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில்  பதிவான வாக்குகளையும், விவிபாட் இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளையும் 10 சதவீதம் அளவுக்கு சரி பார்த்த பின்னரே முடிவுகள் வெளியிடப்படும்.

இதனால் இறுதி முடிவுகள் வெளியாவதில் சற்று தாமதம் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இருப்பினும் 23-ந்தேதி இரவுக்குள் வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் தெரிய வந்து விடும் என்றே தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.