சென்னை: 
ஹை ரிஸ்க் நாடுகளிலிருந்து  தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமைக்​ரான் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளிலிருந்து தமிழகம் வந்த 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. அவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூர் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அதில் 6 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அவர்கள் 6 பேருக்குமே ஒமைக்​ரான் கொரோனா பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.