புவனேஸ்வர்:

ஒடிசாவில் பாலியல் பலாத்கார புகார் கூறிய 14 வயது சிறுமி இன்று தற்கொலை செய்து கொண்டார்.

ஒடிசாவில் கோரபுத் மாவட்டத்தில் மூசாகுடா கிராமத்தில் வசித்து வந்த 11ம் வகுப்பு மாணவியை சீருடையில் இருந்த 4 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த அக்டோபர் 10ம் தேதி புகார் தெரிவித்தார். ஆனால் போலீசார் இதை மறுத்து வந்தனர்.

இந்நிலையில் குடும்பத்தினர் யாரும் வீட்டில் இல்லாத நிலையில் சிறுமி தூக்கு போட்டு கொண்டுள்ளார். அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

தனக்கு நீதி கிடைக்காத ஏமாற்றத்தில் சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர் கூறியுள்ளார். இதற்கு முன்பு அதிக இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்டு சிறுமி தற்கொலைக்கு முயன்ற தகவலும் வெளியாகியுள்ளது. சிறுமியின் மரணத்துக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார்.