தற்போது நிருபர்களை சந்தித்த மு.கஸ்டாலின் “ராமமோகனராவ்வின் பேச்சிற்கு மத்திய அரசும், தமிழக அரசும் தான் விளக்கமளிக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து நிருபர்கள் பல கேள்விகளை கேட்டதும் ஆவேசமாக “என்னை ஏன் கேட்கிறீர்கள், அந்தம்மா முதல்வராக இருந்த போது நீங்கள் சந்திக்கவில்லை. தற்போது ஒபிஎஸ் இருக்கிறார் எனவே அவரிடம் போய் நீங்கள் (ஊடகத்துறை) உங்கள் கேள்விகளை கேட்டு பதிலை வெளியிட்டால் உங்களுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்” என்று கூறினார்.